இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சியில் இருந்த தடைகள் அகலும். எதிரிகள் விலகுவர்.

 

ரிஷபம்

உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். அசையா சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மதியத்திற்கு மேல் சந்தோஷமான செய்தியொன்று வந்துசேரும்.

 

மிதுனம்

அலுவலகப் பணியில் இருந்த அல்லல்கள் அகலும் நாள். வியாபாரத்தில் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். எண்ணிய காரியத்தை எளிதில் முடிப்பீர்கள்.

 

கடகம்

தாமதித்த காரியம் தடையின்றி நடைபெறும் நாள். தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். எதிரிகளின் பலவீனத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவீர்கள். குடும்பச்சுமை கூடும்

 

சிம்மம்

செல்வாக்கு உயரும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். கடமையில் இருந்த தொய்வு அகலும். பணியாளர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. உதிரி வருமானங்களும் பெருகும்

 

கன்னி

வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதம் அமையும் நாள். சொத்துகளால் லாபம் உண்டு. தற்காலிகப்பணியில் இருந்து நிரந்தரப் பணியாளர்களாக மாறும் முயற்சி கைகூடும்.

 

துலாம்

வரவும் செலவும் சமமாகும் நாள். வாய்ப்புகள் வந்தும் உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. சகோதரர் வழியில் சச்சரவுகள் உண்டு. கொடுக்கல் - வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை.

 

விருச்சகம்

புதிய பாதை புலப்படும் நாள். பொது வாழ்வில் புகழ் கூடும். தொழிலில் தொல்லை கொடுத்துவந்தவர்கள் விலகுவர். இடம், பூமி போன்ற அசையா சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

 

தனுசு

குழப்பங்கள் அகலும் நாள். கூட்டுத் தொழில் புரிவோர் லாபம் காண்பர். எதிர்பார்த்த தகவல் நண்பர்கள் மூலம் வந்து சேரும். திட்டமிட்ட பயணத்தில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள்.

 

மகரம்

பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் அகலும் நாள். வரவு திருப்தி தரும். முன்பின் தெரியாதவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். திருமணத் தடை அகலும்.

 

கும்பம்

அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். அடுத்தவர்களின் மனம் புண்படப்பேச வேண்டாம். அனுபவம் மிகுந்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.

 

மீனம்

புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பதவி உயர்வு பற்றிய தகவல் உண்டு. பண வரவு திருப்தியளிக்கும். கடன் சுமை குறையும். சுபகாரியப் பேச்சு முடிவாகும்.