ரோஹித் சர்மாவின் அதிரடி அறிவிப்பு...!
இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரமீயர் லீக் போட்டி தொடரின் சகல போட்டிகளின் போதும் துடுப்பெடுத்தாடுவதற்கு தாம் முதலில் களமிறங்கவுள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா அறிவித்துள்ளார்.
இணையத்தளம் ஊடாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு போட்டிகளின் போதும் முதலாவது வீரராக களமிறங்கியிருந்தேன்.
இந்த முறை போட்டிகளின் போதும் முதலில் களமிறங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அணியின் நன்மைக்காக முகாமைத்துவத்தினால் துடுப்பாட்ட வரிசை மாற்றப்படும் பட்சத்தில் அதனை ஏற்க தயாராகவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்தியன் பிரமியர் லீக் போட்டித் தொடர் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.