கொவிட் 19 இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ள பிரித்தானியா..

கொவிட் 19 இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ள பிரித்தானியா..

பிரித்தானியா தற்போது கொவிட் 19 இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் பொரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

எனினும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் சமூக இடைவெளியை இறுக்கமாக பின்பற்றினால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவில் கொவிட் 19 தொற்று 2 ஆம் அலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் பொரிஸ் ஜொன்சன் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 322 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய அந்த நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 85 ஆயிரத்து 936 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் பிரித்தானியாவில் கொரோனா வைரசால் இதுவரை 41 ஆயிரத்து 732 பேர் உயிரிழந்தனர்.

இதேவேளை, சர்வதேச ரீதியில் கொவிட் 19 தொற்றால் 3 கோடியே 68 லட்சத்து 27 ஆயிரத்த 769 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதுடன் 9 லட்சத்து 55 ஆயிரத்து 660 பேர் உயிரிழந்துள்ளனர்;.

எவ்வாறெனினும் உலகளவில் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டிருந்த 2 கோடியே 23 லட்சத்து 21 ஆயிரத்து 842 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.