கேரள அரசுக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு

கேரள அரசுக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு

தங்க கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கேரள அரசுக்கு எதிராக 2 வழக்குகளை சுங்கத்துறை பதிவு செய்துள்ளது.

கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதகரம் வழியாக தங்கம் கடத்தியதாக முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ, அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், கேரள அரசுக்கு எதிராக 2 வழக்குகளை சுங்கத்துறை பதிவு செய்துள்ளது.

ஐக்கிய அரசு அமீரக தூதரகம் மூலம் இறக்குமதி செய்த திருக்குரான் புத்தகங்கள் மற்றும் 18 ஆயிரம் கிலோ பேரிச்சம்பழங்களை பெற்றுக்கொண்டதாக கேரள அரசுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.