
இரகசிய தகவலை அடுத்து யாழில் இளம் யுவதி கைது
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் 185mg ஹெரோயின் போதைப்பொருளுடன் அதே இடத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இன்று 21.09.2020 மதியம் 02.00 மணியளவில் மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த யுவதி யாழ் . கொழும்புத்துறை பகுதியில் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த வேளையில் மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்
மதுவரி உதவி ஆணையாளர் வடமாகாணம் பிரபாத் ஜெயவிக்கிரவின் வழிநடத்தலின் கீழ் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ரகுநாதன் தலைமையிலான சக மதுவரி பரிசோதகர் V.ரசிகரன் மற்றும் EG 1026 V.அனுஷன் FEG 67 T. வாசுகி ஆகியோர் கொண்ட குழு அணியினரால் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது
அண்மைய நாட்களில் யாழ்ப்பாண குடாநாட்டில் பல்வேறு இடங்களில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் முப்படையினர் மற்றும் மது வரித்திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.