
ஏ - 09 வீதியில் விபத்து! அதிஷ்டவசமாக தப்பிய சாரதி
ஏ - 09 வீதியில் வீதியின் பச்சிலைப்பள்ளி - பளைப் பகுதியில் டிப்பர் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 7 மணியளவில் குறித்த வாகனத்தின் பின் சில்லு காற்றுப் போனதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் டிப்பர் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் சாரதியும் அதிஷ்டவசமாக தப்பியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.