இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு -புதிய வழிமுறைகள் அமுல்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு -புதிய வழிமுறைகள் அமுல்

இங்கிலாந்தில் கொரோனா இரண்டாவது அலை தாக்குமென அஞ்சப்படுவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 13,000 டொலர் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறும்போது, “பிரிட்டன் இவ்வாரம் கொரோனா பரவலின் இரண்டாம் கட்டத்தை எதிர் கொள்ளும் என்று எதிர்பார்க்கிறது.எனவே கொரோனா பரவலை தடுப்பதற்கு சரியான வழி விதிமுறைகளை கடைப்பிடிப்பதுதான்.

ஆகவே இங்கிலாந்து முழுவதும் கொரோனா பரவலை தடுப்பதற்கு புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இதன்படி தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 13,000 டொலர்வரை அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.