கழுத்தை நெரிக்கும் முறையை முடிவுக்குகொண்டு வரும் அமெரிக்கா

கழுத்தை நெரிக்கும் முறையை முடிவுக்குகொண்டு வரும் அமெரிக்கா

சில சந்தேககத்துக்குரியவர்களை தடுப்பதற்காக பொலிஸாரால் பயன்படுத்தப்படும் சர்ச்சைக்குரிய 'சோக்ஹோல்ட்' என்ற 'கழுத்தை நெரிக்கும் முறையை' முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்தின் பின்னர் இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட்டமையை அடுத்து அமெரிக்க பொலிஸாரின் மத்தியில், 'கழுத்தை நெரித்தல்' நடவடிக்கையை தடைசெய்யும் யோசனை முன்வைக்கப்பட்டது.

இந்தநிலையில் 'மிகவும் நல்ல விஷயம்' என்று அமெரிக்க ஜனாதிபதி கூறினார், ஆனால் அவை இன்னும் சில சூழ்நிலைகளில் தேவைப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபிலாய்டின் கழுத்தில் மண்டியிட்டு நெரித்ததன் காரணமாகவே அவர் இறந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் பொலிஸ் அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டு இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அமெரிக்க பொலிஸில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்று யோசனைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் நே நொக் வொரன்ட் என்ற வீட்டாரின் அனுமதியின்றி உட்புகுதல் என்ற நடவடிக்கையை தடை செய்யும் யோசனையும் அடங்குகிறது.