
உலக நாடுகளுக்கு சீன அதிபரின் பகிரங்க அறிவிப்பு
உலக நாடுகளுடன் போர் செய்வது எமது நோக்கம் கிடையாதென சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது ஆண்டு தினத்தினை நினைவுகூரும் வகையில் இடம்பெற்று வரும் பொதுச்சபை கூட்டத்தில் நேற்றையதினம் அவர் இதனை தெரியப்படுத்தியுள்ளார். இதன் போது மேலும் கருத்துரைத்த அவர்,
உலகில் வளர்ந்து வரும் நாடாக சீனா உள்ளது. அமைதி, வெளிப்படைத் தன்மை, ஒத்துழைப்பு மற்றும் பொது வளர்ச்சிக்கான பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.
நாங்கள் ஒருபோதும் தலைமைத்துவத்தினை கோரவில்லை. எங்களுக்கு எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கமும் கிடையாது.
மற்ற நாடுகளுடனான வேற்றுமைகள் மற்றும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்வு காணும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்தும் ஈடுபடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இப்பொதுச்சபைக் கூட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகத் தலைவர்கள் பலர் காணொளி காட்சி வழியே பங்கேற்று பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.