வடக்கில் முழுமையாக அடக்குவேன்! புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்

வடக்கில் முழுமையாக அடக்குவேன்! புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்

வடக்கில் இடம்பெறும் வன்முறைக் கும்பல்களின் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக கட்டுப்படுத்தப்படும் என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்ம ரட்ண தெரிவித்துள்ளார்.

இதேவேளை முப்படைகளின் உதவிகள் குறித்த குழுக்களின் சமூக விரோத செயற்பாடுகள் அனைத்தும் அடக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் காங்கேசன் துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் பதவியை ஏற்றுக் கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனைகள், சட்ட மீறல்கள், வன்முறை குழுக்களின் அடாவடிகள் என அனைத்துக்கும் எதிரான நடவடிக்கைகள் தொடரும்

இனியும் அவ்வாறான குழுக்கள் இயங்கினால் அவர்களுக்கு எதிராக, நீதியாக செயற்பட்டு அவற்றின் செயற்பாடுகள் உடனடியாக கட்டுப்படுத்தப்படும்.

வடக்கு மாகாணத்தில் இயங்குகின்ற வன்முறை குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை.

நீதியை கையிலெடுக்கும் இவ்வாறான வன்முறைக் கும்பல்களுக்கு எதிராக பாரபட்சமின்றி, துரிதமாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.