தென்கொரியாவிடம் மன்னிப்புக் கொரியா வட கொரிய அதிபர்!

தென்கொரியாவிடம் மன்னிப்புக் கொரியா வட கொரிய அதிபர்!

எல்லைமீறிய தாக்குதல் காரணமாக தென் கொரியா நபர் ஒருவர் வட கொரியா நபர் ஒருவரால் தாக்கிய கொலை செய்யப்பட்டதற்கு தான் பொது மக்களிடம் மன்னிப்புக்கோருவதாக அந் நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

வட கொரிய எல்லைக்கு 10 கி.மீ. தொலைவில், யியோன்பியோங் தீவுக்கு அருகே 47 வயதான தென்கொரிய மீன்வளத்துறை அதிகாரி கடந்த திங்கட்கிழமையன்று படகில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்.

அவர் திடீரென மாயமானார். அவர் அந்தப் படகில் தனது ‘ஷூ’க்களை விட்டுச்சென்றிருந்தது தெரிய வந்தது. அவர் வடகொரியாவுக்குள் ஊடுருவ முயன்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

அதையடுத்து செவ்வாய்க்கிழமையன்று அவர் வடகொரியாவுக்கு சொந்தமான கடல்பகுதியில் காணப்பட்டுள்ளார். ஆனால் அவரை வடகொரிய துருப்புகள் விசாரணை நடத்தி சுட்டுக்கொன்று விட்டனர். அத்துடன் அவரது உடலை எண்ணெய் ஊற்றி எரித்தும் விட்டனர்.

இதை தென்கொரிய இராணுவம் உறுதி செய்துள்ளது. இந்த வன்செயலால் இரு தரப்பு எல்லையில் பெரும் பதற்றம் நிலவியது. வடகொரியாவின் செயலை மிருகத்தனமான செயல் என கூறி தென் கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு விளக்கம் அளிப்பதுடன், காரணமானவர்களை வடகொரியா தண்டிக்கவும் வேண்டும் என்று தென்கொரியா வலியுறுத்தி இருந்தது.

இந்த நிலையில், தென்கொரிய வீரர் கொல்லப்பட்டதற்கு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபரிடமும், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியதாக தென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.