கொரோனா தடுப்பூசி குறித்த பிரதமரின் உரைக்கு ஐ.நா. பாராட்டு

கொரோனா தடுப்பூசி குறித்த பிரதமரின் உரைக்கு ஐ.நா. பாராட்டு

ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், கொரோனா தடுப்பூசி குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு, உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின், 75ஆம் ஆண்டு பொதுச் சபை கூட்டம், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்று வருகிறது. இதில், பிரதமர் மோடி, நேற்று முன்தினம் உரையாற்றினார்.

இதன்போது, உலகில், தடுப்பூசிகளை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு இந்தியா என தெரிவித்திருந்தார்.

மேலும் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு, அனைத்து மனிதர்களுக்கும் உதவ, இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோக திறன் முழுமையாக பயன்படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.

பிரதமர் மோடியின் இந்த வாக்குறுதிக்கு, உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியாசிஸ், ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், தடுப்பூசி குறித்து, இந்திய பிரதமர் மோடி அளித்துள்ள வாக்குறுதிக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் நம் வளங்கள் மற்றும் திறமையை ஒன்றாக திரட்டி பணியாற்றினால்தான், கொரோனா தொற்றுக்கு முடிவு காண முடியும என்றும்; பதிவிட்டுள்ளார்.