பொதுத்தேர்தலுக்கான ஒத்திகை நடவடிக்கைகள் தற்சமயம்...!
பொதுத்தேர்தலுக்கான ஒத்திகை நடவடிக்கைகள் தற்போது 6 மாவட்டங்களில் தற்போது இடம்பெற்று வருகின்றது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்களிப்பு நடவடிக்கைகள் யாழ்ப்பாணம், பதுளை, புத்தளம், அம்பாறை, நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஒத்திகை தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை கொழும்பு மாவட்ட்த்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி இரண்டு இடங்களில் குறித்த தேர்தல் ஒத்திகை இடம்பெறவுள்ளது.
இதேவேளை அச்சம் இன்றி வாக்களிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இதன் போது மக்களிடம் கோரியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நோய்த் தொற்று பரவாத வகையில் சுகாதார முறைமைகளை பின்பற்றி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.