அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!

அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!

நாட்டில் கொரோனா தொற்றுறுதியாகியுள்ள ஆயிரத்து 884 பேரில் ஆயிரத்து 252 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன் 621 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 120 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இரண்டு பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐ.டி.எச் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார். அத்துடன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 77 பேர் இன்று தமது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளனர்.

இராணுவப் பேச்சாளர் பிரேகேடியர் சந்தன விக்ரமசிங்க இதனை தெரிவித்தார. அத்துடன் இராணுத்தினர் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற 44 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 4 ஆயிரத்து 463 பேர் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை இந்தியாவில் தொடர்ந்தும் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் சட்டவிரோதமாக இலங்கைக்குள் அங்குள்ளவர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்குள் ஊடுறுவக் கூடிய அச்சம் காணப்படுவதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை கட்டுப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இறுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார். அத்துடன் கடற்படையினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இறுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.