
கோர விபத்து; மரண ஓலமிட்ட பயணிகள்: 13பேர் உடல் கருகிப் பலி!
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் உடல் கருகிப் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஐதராபாத் நகரில் இருந்து கராச்சி நகர் நோக்கி பயணிகள் வான் ஒன்று புறப்பட்டு சென்றது. குறித்த வானில் 20 பயணிகள் இருந்தனர்.
கராச்சி ஐதராபாத் நெடுஞ்சாலையில் உள்ள வளைவு ஒன்றில் திரும்பியபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வான் சாலையில் கவிழ்ந்தது வானில் இருந்த பெற்றோல் தாங்கி வெடித்து வான் தீப்பிடித்து எரிந்ததுள்ளது .