
கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 10 இலட்சத்தை கடந்துள்ளது.
சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்தாண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது, இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியையும் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.43 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அந்த வகையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10,00,195 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.