பல இலட்சம் ரூபாய் மோசடி செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்...!

பல இலட்சம் ரூபாய் மோசடி செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்...!

மொறட்டுவை-ராவதாவத்த பகுதியில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த பணியகத்தின் செயற்பாடுகளுக்கு அரசியல்வாதி ஒருவரின் பங்களிப்பு கிடைக்கப்பெற்றிருக்கும் என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் இந்த பணியகத்தின் தலைவர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகித்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக குறிப்பிட்டு ஒருவரிடம் இருந்து தலா 08 இலட்சம் வீதம் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.