
யாழ்.கொழும்புத்துறைப் பகுதியில் வீடொன்றை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படை!
சட்ட விரோதமான முறையில் இறைச்சிக்காக பிடிக்கப்பட்ட 05 கடலாமைகள் நேற்று இரவு யாழ் பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவினரால் கைப்பற்றப்பட்டன.
பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கொழும்புத்துறை வள்ளுவர் புரத்தில் அமைந்துள்ள வீடுஒன்றில் ஒன்று முற்றுகையிடப்பட்டது. இந்நிலையில், அந்த வீட்டில் கடலாமைகளும் கைப்பற்றப்பட்டன.
இதன் போது 36 வயது உடைய வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கடலமைகள், மற்றும் வீட்டு உரிமையாளரும் யாழ் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் யாழ் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
இன்று காலை 11 மணியளவில் கடலாமையுடன் வீட்டு உரிமையாளரை யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் நீரியல் வளத்திணைக்க உதவிப்பணிப்பாளர் சுதாகர் தெரிவித்தார்.