கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 1,178 பேருக்கு கொரோனா தொற்று..!

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 1,178 பேருக்கு கொரோனா தொற்று..!

கொவிட்-19 தொற்றால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 178 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் இந்தியாவில் நேற்றையதினம் மாத்திரம் 80 ஆயிரத்து 500 கொவிட்-19 தொற்றுறதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்தியாவில் கொவிட் 19 தொற்றுறதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 62 இலட்சத்து 23 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்றினால் இதுவரையில் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்- 19 தொற்றால் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 923 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் கொவிட்-19 தொற்றால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 10 ஆயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட்-19 காரணமாக ஐயாயிரத்து 717 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் குறி;த்த காலப்பகுதியில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 197 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 26 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் 10 லட்சத்து 11 ஆயிரத்து 855 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்றுறுதியான 2 கோடியே 51 லட்சத்து 28 ஆயிரத்து 828 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.