
இந்திய துணை ஜனாதிபதிக்கு கொரோனா
இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கொரோனா தொற்றுக்கு உள்ளானமை பரிசோதனை மூலம் கணடறியப்பட்டுள்ளது.
வெங்கையா நாயுடு வழமையான மருத்துவபரிசோதனையை மேற்கொண்டவேளை அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கொரோனாவிற்கான அறிகுறி எதுவும் அவரிடம் தென்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவரை தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை வெங்கையா நாயுடுவின் மனைவிக்கு கொரோனா இல்லை என்பதும் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.