
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த மஞ்சள் தொகை மீட்பு
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2 ஆயிரத்து 325 கிலோ கிராம் மஞ்சள் தொகை தமிழக காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகில் உள்ள காரங்காடு கிராமத்தில் இருந்து குறித்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு கடல் மார்க்கமாக மஞ்சள் கடத்தப்படவுள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றைய தினம் குறித்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தமிழக காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.