சிறுவர் திருமணங்களின் அதிகரிப்பு குறித்து Save the Children அமைப்பு எதிர்ப்பு!

சிறுவர் திருமணங்களின் அதிகரிப்பு குறித்து Save the Children அமைப்பு எதிர்ப்பு!

கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய ரீதியில் குழந்தை திருமணங்களின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாக இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் Save the Children அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தெற்காசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் சில பகுதிகளில் உள்ள பெண்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் உலகளவில் வறுமை அதிகரித்து வரும் நிலையில், சிறுமிகளை பாடசாலைகளில் இருந்து இடைநிறுத்தி தொழில் அல்லது திருமணத்திற்கு கட்டாயப்படுத்துவதாகவும் Save the Children அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.