ரஷ்யாவில் ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு பிறகு நாளொன்றுக்கான பாதிப்பு அதிகரிப்பு!

ரஷ்யாவில் ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு பிறகு நாளொன்றுக்கான பாதிப்பு அதிகரிப்பு!

ரஷ்யாவில் ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஒன்பதாயிரத்து 412பேர் பாதிப்படைந்ததோடு, 186பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 12ஆம் திகதி 8,987பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததுக்கு பிறகு தற்போது, நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது.

அண்மைய தினங்களாகவே ஆறாயிரம் என்ற ரிதியில் நாளொன்றுக்கான பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், தீடிரென இன்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை 11 இலட்சத்து 94ஆயிரத்து 643பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 21ஆயிரத்து 77பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இரண்டு இலட்சத்து மூவாயிரத்து 270பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர, வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் ஒன்பது இலட்சத்து 70ஆயிரத்து 296பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.