
தமிழகத்தில் ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 44,661 ஆக உயர்வு
தமிழகத்தில் ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661 ஆக அதிகரித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் ஒரேநாளில் மேலும் 1,974 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 33 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மொத்த பாதிப்பு 44,661 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, சென்னையில் 31 பேரும் காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர், விழுப்புரம், மதுரை, செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் தலா ஒருவரும் என மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளதால், தமிழகத்தில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து கொரோனா வைரஸினால் இந்தியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. அதற்கமைய இந்த தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 9,520 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதோடு, 333,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.