
பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் கொரோனா தொற்றுதியானவர்களில் மேலும் 33 கடற்படையினர் குணமடைந்துள்ளனர். கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரை குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், 175 கடற்படை சிப்பாய்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.