பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 6,968பேர் பாதிப்பு- 66பேர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 6,968பேர் பாதிப்பு- 66பேர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 6,968பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 66பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 12ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை நான்கு இலட்சத்து 67ஆயிரத்து 146பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 42ஆயிரத்து 268பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான பகுதிகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வடகிழக்கு இங்கிலாந்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

பப்கள் மற்றும் உணவகங்கள் போன்ற எந்தவொரு உட்புற அமைப்பிலும் மற்றும் வீடுகளுக்கு இடையில் மக்கள் கலப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொவிட்-19க்கு நேர்மறையானதை சோதிக்கும் எவரும் அல்லது வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டதாகக் கூறப்பட்டால், அவர் சுய தனிமைப்படுத்தப்படல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.