கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டை தவறிய அமெரிக்கா!

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டை தவறிய அமெரிக்கா!

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா தவறியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஆறு வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் சடுதியாக அதிகரித்துள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க குடியரசு கட்சி உறுப்பினர்கள் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்றுக்குள்ளான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக பிரித்தானிய பிரதமர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.