வடமராட்சி கிழக்கில் 9 பேர் கட்டாய தனிமைப்படுத்தல் - கேதீஸ்வரன் தகவல்

வடமராட்சி கிழக்கில் 9 பேர் கட்டாய தனிமைப்படுத்தல் - கேதீஸ்வரன் தகவல்

டமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடன் தொடர்பினை பேணிய 9 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த 9 பேருடன் தொடர்பில் இருந்த வடமராட்சி கிழக்கு பகுதியைச் சேர்ந்த 70 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் குறித்த 9 பேருடன் மொத்தமாக 69 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.