காவற்துறை அதிகாரியை விபத்துக்குள்ளாக்கிய சட்டபீட மாணவரின் விளக்கமறியல் நீடிப்பு
அரச புலனாய்வு சேவையில் பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரியொருவர் விபத்துக்குள்ளாகிய சட்டபீட மாணவரை எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அரச புலனாய்வு சேவையில் பணியாற்றி வந்த காவல்துறை உத்தியோகத்தர் கடந்த 14 ஆம் திகதி இரவு பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையில் உந்துருளிக்கு எரிபொருளை நிரப்பி கொண்டு அங்கிருந்து வெளியேறிய போது விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த விபத்தில் 22 வயதுடைய பொலனறுவை-நெலும்வெவ பகுதியில் வசித்து வந்த காவல்துறை உத்தியோகத்தர் பரிதாபமாக பலியாகியிருந்தார். இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற 79 லட்சம் ரூபா கொள்ளை சம்பவத்தை கட்டுப்படுவதற்கு முயற்சித்த காவல்துறை உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.