20 ஆவது திருத்தத்தால் எந்த பிரச்சனையும் இல்லை -யாழில் அமைச்சர் டக்ளஸ்

20 ஆவது திருத்தத்தால் எந்த பிரச்சனையும் இல்லை -யாழில் அமைச்சர் டக்ளஸ்

20 வது அரசியலமைப்பு திருத்தம் மக்கள் ஆணைக்கு ஏற்ப மக்களின் அபிவிருத்திகளை நிறைவேற்றக்கூடியதாக அமையும். அதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத கிராம வீதிகள் மற்றும் தீவகத்திற்கான நெடுஞ்சாலை வீதி என்பனவற்றை அபிவிருத்தி செய்யும் வகையிலான ஆரம்ப பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பெருக்குளம் உள்ளக வீதியும் விபுலானந்த வீதியையும் புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. யாழ் பிரதேச செயலாளர் எஸ். சுதர்சன், யாழ் மாநகர சபை ஆணையாளர் எஸ்.ஜெயசீலன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.