விக்டோரியாவில் 12 பேருக்கு கொரோனா தொற்று, மேலும் ஒரு மரணமும் பதிவு

விக்டோரியாவில் 12 பேருக்கு கொரோனா தொற்று, மேலும் ஒரு மரணமும் பதிவு

அவுஸ்ரேலியாவில் அதிக தொற்றுநோயாளிகள் அடையாளம் காணப்பட்ட மாநிலமான விக்டோரியாவில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகள் எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயர்ந்துள்ளன.

24 மணி நேரத்தில் விக்டோரியாவில் 12 புதிய நோயாளிகள் உட்பட நாடு முழுவதும் புதிதாக 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெல்போர்னில் சனிக்கிழமையன்று எட்டு புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டவர் என்றும் அதேவேளை மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அவுஸ்ரேலியாவில் இதுவரை 27,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 894 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் விக்டோரிய மாநிலத்தில் COVID-19 நோயாளிகள் அல்லது அறியப்படாத ஆதாரத்துடன் கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.