யாழில் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்! – சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

யாழில் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்! – சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

யாழ்.புங்குடுதீவைச் சேர்ந்த 22 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.கேதீஸ்வரன்  குறிப்பிட்டுள்ளார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பெண் பணியாளருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றிரவு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு பணி புரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உள்ளிட்ட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 22 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த தகவலினை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.