
கோ. சுப்பிரமணியன் (அக்டோபர் 7, 1906 - ஆகத்து 28, 1971) என்பவர் வழக்கறிஞராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் இருந்து தமிழுக்குத் தொண்டு புரிந்துள்ளார். சைவ சமய நூல்கள் பலவும் இயற்றியுள்ளார்.
கோ. சுப்பிரமணியன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிந்துப்பூந்துறையில் 07-10-1906 ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் கோமதிநாயகம் பிள்ளை உலகாம்பாள் ஆகியோர் ஆவர். நெல்லை, உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், இந்துக் கல்லூரி, புனித சேவியர் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்னர், சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.
தமிழின் மீது பற்றுக்கொண்ட இவர், தாம் ஆற்றிய வழக்கறிஞர் தொழிலைத் துறந்து, தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றார். தமிழிலக்கியத்தில் வரலாற்றுச் செய்திகள் எனும் கட்டுரையை எழுதி அனைவரின் பாராட்டையும் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சண்முகம் செட்டியாரின் விருப்பத்திற்கிணங்க, தமிழாராய்ச்சித் துறை ஒன்றைத் தனியே ஏற்படுத்தி அதற்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
படைப்புகள்
அப்பர் விருந்து
இளங்கோ விருந்து
கம்பர் விருந்து
மாணிக்க விருந்து
இலக்கியச் செல்வம்
இன்ப வாழ்வு
துள்ளி வருகுதுவேல்
கவி இன்பம்
முத்தமிழ் முழக்கம்
வாலி வதை
வெண்ணிலவில்
புதுமனைப் பரிசு
வாசகரும் வாகீசரும் முதலிய தமிழ் நூல்களையும்,
சைவ சித்தாந்த அகமும் வரலாறும்
பழந்தமிழர் வாழ்வில் சகுனங்களும் நம்பிக்கைகளும்
மரபு வழிபாடும் நாக வணக்கமும். முதலிய ஆங்கில நூல்களையும் படைத்துள்ளார்.
இவருக்குத் தருமபுரம் ஆதீனம், திருநின்ற நெறியாளர் எனும் பட்டத்தை வழங்கியுள்ளது. மதுரை ஆதீனம், சைவப் பேராசிரியர் எனும் பட்டத்தை வழங்கியுள்ளது.
இவர் தமது 65 ஆவது அகவையில் 26-8-1971 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.
மேலும் முக்கிய பிரமுகர்கள் பிறந்த மற்றும் இறந்த தினங்கள்
1885 – நீல்சு போர், நோபல் பரிசு பெற்ற டென்மார்க்கு இயற்பியலாளர் (இ. 1962)
1900 – ஐன்ரிக் இம்லர், செருமானிய இராணுவத் தளபதி, அரசியல்வாதி (இ. 1945)
1906 – மு. செல்லையா, ஈழத்துக் கவிஞர் (இ. 1966)
1906 – கோ. சுப்பிரமணியன், தமிழகத் தமிழறிஞர், பேராசிரியர், வழக்கறிஞர் (இ. 1971)
1914 – பேகம் அக்தர், இந்தியப் பாடகி, நடிகை (இ. 1974)
1920 – முடியரசன், தமிழகக் கவிஞர் (இ. 1998)
1931 – டெசுமான்ட் டுட்டு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க ஆயர்
1935 – தாமஸ் கெநீலி, ஆத்திரேலிய எழுத்தாளர்
1937 – அ. தட்சிணாமூர்த்தி, தமிழறிஞர், நூலாசிரியர்
1938 – ஞானக்கூத்தன், தமிழகக் கவிஞர் (இ. 2016)
1938 – புளியங்குடி க.பழனிச்சாமி, தமிழக அரசியல்வாதி (இ. 2007)
1945 – நிக்கோலாய் சக்கூரா, உருசிய வானியற்பியலாளர்
1952 – விளாதிமிர் புதின், ரசியாவின் 4வது அரசுத்தலைவர்
1978 – ஜாகிர் கான், கிரிக்கெட் வீரர்
1979 – சான் ஆஷ்மோர், கனடிய நடிகர்
1979 – நரேன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1981 – வைக்கம் விஜயலட்சுமி, தென்னிந்திய வீணைக் கலைஞர், பின்னணிப் பாடகி
1983 – பூஜா காந்தி, தென்னிந்திய நடிகை
1708 – குரு கோவிந்த் சிங், 10வது சீக்கிய குரு (பி. 1666)
1849 – எட்கர் ஆலன் போ, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1809)
1919 – ஆல்பிரெட் டிக்கன், ஆஸ்திரேலியாவின் 2-வது பிரதமர் (பி. 1856)
1984 – அப்துல் காதர் லெப்பை, இலங்கைக் கவிஞர் (பி. 1913)
2006 – அன்னா பலிட்கோவ்ஸ்கயா, அமெரிக்க-ரஷிய ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (பி. 1958)
2010 – அ. வெங்கடாசலம், தமிழக அரசியல்வாதி (பி. 1955)
2012 – ஏ. ஜெகந்நாதன், இந்திய இயக்குநர்.