விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையே போர் ஆரம்பமான நாள் (அக்.10- 1987)

விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையே போர் ஆரம்பமான நாள் (அக்.10- 1987)

விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1780 - கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை பலியானார்கள். * 1868 - கியூபாவின் முதலாவது விடுதலைப் பிரதேசம் லாடெமஹாகுவா பகுதியில் கார்லோஸ் செஸ்பெடஸ் என்பவர் தலைமையில் அறிவிக்கப்பட்டது. * 1911 - வூச்சாங் எழுச்சி ஆரம்பமாகியது. இது சிங் வம்சத்தை

 

விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1780 - கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை பலியானார்கள். * 1868 - கியூபாவின் முதலாவது விடுதலைப் பிரதேசம் லாடெமஹாகுவா பகுதியில் கார்லோஸ் செஸ்பெடஸ் என்பவர் தலைமையில் அறிவிக்கப்பட்டது. * 1911 - வூச்சாங் எழுச்சி ஆரம்பமாகியது. இது சிங் வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சீனக் குடியரசு உருவாவதற்கு வழிவகுத்தது. * 1916 - வட இலங்கை அமெரிக்க மிஷன் தனது நூற்றாண்டு நிறைவை யாழ்ப்பாணம், பட்டிக்கோட்டா செமினறியில் கொண்டாடியது.

* 1942 - சோவியத் ஒன்றியம் ஆஸ்திரேலியாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது. * 1943 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியரின் பிடியில் இருந்த சிங்கப்பூரில் சிங்கப்பூர் துறைமுகம் மீதான தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக 57 அப்பாவிகள் ஜப்பானியர்களினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர். * 1944 - இரண்டாம் உலகப் போர்: 800 ஜிப்சி சிறுவர்கள் அவுஸ்விச் வதைமுகாமில் படுகொலை செய்யப்பட்டனர். * 1945 - போருக்குப் பின்னரான சீனா குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் குவோமின்டாங்கும் உடன்பாட்டிற்கு வந்தனர். இது இரட்டை பத்து உடன்பாடு என அழைக்கப்படுகிறது.

* 1949 - விடுதலை பெற்ற இலங்கையின் புதிய ராணுவம் உருவாக்கப்பட்டது. * 1957 - ஐக்கிய இராச்சியம், கம்ப்றியா என்ற இடத்தில் உலகின் முதலாவது அணுக்கரு உலை விபத்து நிகழ்ந்தது. * 1967 - விண்வெளி தொடர்பாக அறுபதுக்கும் அதிகமான நாடுகள் ஜனவரி 27-ம் நாள் கையெழுத்திட்ட உடன்பாடு அமல் படுத்தப்பட்டது. * 1970 - பீஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

* 1970 - மொண்ட்றியால் நகரில் கியூபெக்கின் உதவிப் பிரதமரும், தொழிலமைச்சரும் கியூபெக் விடுதலை முன்னணி தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டனர். * 1971 - விற்பனை செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டுபோகப்பட்ட லண்டன் பாலம் அரிசோனாவின் லேக் ஹவாசு நகரில் மீள அமைக்கப்பட்டது. * 1986 - 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் எல் சல்வடோரின் சான் சல்வடோர் நகரைத் தாக்கியதில் 1,500 பேர் இறந்தனர். * 1987 - விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.