முல்லைத்தீவு - குமுழமுனையில் வன்முறைக் கும்பல்! மடக்கிப்பிடித்த பொலிஸார்

முல்லைத்தீவு - குமுழமுனையில் வன்முறைக் கும்பல்! மடக்கிப்பிடித்த பொலிஸார்

முல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நான்குபேர் கொண்ட கும்பல் ஒன்றை நேற்றையதினம் இரவு (11) கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

இக்கும்பலுடன் முல்லைத்தீவு மாவட்ட வனவளத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் தொடர்புபட்டு இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வனவளத்திணைக்கள உயர் அதிகாரிகளின் துணையுடன் குமுழமுனை பிரதேசத்தில் தொடச்சியாக இடம்பெற்று வரும் காடழிப்பு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய இன்னும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்காவிட்டால் ஆயுதக்குழுவின் செயற்பாட்டினை போல் இவர்கள் இயங்குவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

விக்டர் குழுவுடன் சம்மந்தப்பட்ட ஒருவரின் தலைமையின் கீழ் நான்கு போர் கொண்ட கும்பல் குறித்த பிரதேசத்தில் நேற்று பொதுமகன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வனவளத்திணைக்கள உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து குமுழமுனை பிரதேசத்தில் உள்ள வனவளத்திணைக்கள அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தினைச் சேர்ந்த மூவரும் மல்லாவிப் பகுதியினைச் சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் - T-56துப்பாக்கி ரவைகள் 6, ஈயகுண்டு 1,ஈயத்தினால் குத்தும் கம்பிகள் 44, என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைதான இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.