யாழ். நகர்ப்பகுதியில் வெடிமருந்து உட்பட்ட பொருட்கள் கண்டெடுப்பு!

யாழ். நகர்ப்பகுதியில் வெடிமருந்து உட்பட்ட பொருட்கள் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம், சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பின்பகுதியில் உள்ள குளத்திற்கு அண்மையில் இருந்து வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆர்.டி.எக்ஸ் மற்றும் ரி.என்.ரி மருந்து கலக்கப்பட்ட நான்கு கிலோ மூன்று கிராம் எடையுள்ள வெடிமருந்துப் பொதி மற்றும் 10 ரெடினேட்டர்கள் என்பன விசேட அதிரடிப்படையினரால் இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டெடுக்கப்பட்டன.

விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே குறித்த வெடிமருந்துகள் எடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையின் பொலிஸ் பரிசோதகர் எம்.ஏ.பகட் தலைமையிலான குழுவினரே குறித்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டதுடன் வெடிமருந்தையும் கண்டெடுத்தனர்.

இந்நிலையில், குறித்த வெடிமருந்து உள்ளிட்ட பொருட்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.