
யாழில் டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் சாவு
டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் கருணாரட்ணம் கருணானந்தன் (36 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோப்பாய் சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது குறித்த குடும்பஸ்தர் உயிர்ந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.