கிளிநொச்சியில் இடம்பெற்ற குழுமோதல்!
கிளிநொச்சி-தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராமநாதபுரம் பகுதியில் இருகுழுக்களுக்கிடையே மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மாலை இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில், 7பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, 2பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தருமபுர பொலிசார், அங்கிருந்து 4 மோட்டார் சைக்கிள், சிம் அட்டைகள், தேசிய அடையாள அட்டைகளையும் மீட்டதுடன் சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் விரிவான விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர் என தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கின்சிலி கேரத் தெரிவித்தார்.