பிரான்சில் பெண்களுக்கு முதல் முறையாக வாக்குரிமை வழங்கப்பட்ட நாள் (அக். 21- 1945)

பிரான்சில் பெண்களுக்கு முதல் முறையாக வாக்குரிமை வழங்கப்பட்ட நாள் (அக். 21- 1945)

பிரான்சின் முதல் முறையாக பெண்கள் வாக்குரிமை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1805 - டிரபல்கார் என்ற இடத்தில் பிரிட்டன் படைகள் பிரெஞ்சு, மற்றும் ஸ்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரிட்டன் கடற்படையை 20-ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது. * 1805 - ஊல்ம் என்ற இடத்தில்

 

பிரான்சின் முதல் முறையாக பெண்கள் வாக்குரிமை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1805 - டிரபல்கார் என்ற இடத்தில் பிரிட்டன் படைகள் பிரெஞ்சு, மற்றும் ஸ்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரிட்டன் கடற்படையை 20-ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது. * 1805 - ஊல்ம் என்ற இடத்தில் ஆஸ்திரியா, நெப்போலியனின் பெரும் ராணுவத்திடம் சரணடைந்தது. நெப்போலியன் 30 ஆயிரம் பேரைச் சிறைப்பிடித்தான். * 1824 - ஜோசப் ஆஸ்ப்டின் போர்ட்லண்ட் சிமெண்டுக்கான காப்புரிமம் பெற்றார். * 1837 - அமெரிக்கப் பழங்குடித் தலைவன் ஒசியோலா கைது செய்யப்பட்டான்.

* 1854 - புளோரன்ஸ் நைட்டிங்கேல் மற்றும் 38 தாதிகள் கிரிமியன் போர் முனைக்கு அனுப்பப்பட்டனர். * 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பினரிடம் வேர்ஜீனியாவில் தோற்றனர். ஆபிரகாம் லிங்கனின் நெருங்கிய நண்பர் எட்வேர்ட் பேக்கர் கொல்லப்பட்டார். * 1876 - யாழ்ப்பாணத்தில் காலரா நோய் வேகமாகப் பரவியது. * 1879 - தாமஸ் எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்குமிழைப் பரிசோதித்தார். இது 13 மணி நேரம் எரிந்தது.