யாழில் கொரோனா அச்சம் - மீன் வியாபாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை

யாழில் கொரோனா அச்சம் - மீன் வியாபாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை

யாழ். மாநகர சபைக்குட்பட்ட அனைத்து மீன் சந்தைகளினதும் வியாபாரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

சில பிரதேசங்களில் மீன் விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து குருநகர், பாசையூர், சின்னக்கடை, நாவாந்துறை, கல்வியங்காடு உள்ளிட்ட அங்காடிகளில் இன்றும் நாளையும் இப்பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் முதல் கட்டமாக பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்தவர்களாக அறியப்படும் வியாபாரிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டால் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சந்தைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக மாநகர சபைக்குட்பட்ட மரக்கறிச் சந்தைகள் மீதும் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.