முதலாவது ஏர்பஸ் 'ஏ300' விமானம் பறந்த நாள் (அக்.28- 1972)

முதலாவது ஏர்பஸ் 'ஏ300' விமானம் பறந்த நாள் (அக்.28- 1972)

ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ300 ரக விமானம் முதன் முதலாக 1972-ம் ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி வானில் பறந்தது. 1974-ம் ஆண்டு மே 30-ந்தேதி பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்தது. 2007-ம் ஆண்டு ஜுலை மாதம் இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1962 - கியூபாவிலிருந்து சோவியத் ஏவுகணைகளை அகற்றுவதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவ் அறிவித்தார். * 1985 - சண்டினீஸ்டாவின் டானியேல் ஒர்ட்டேகா நிகராகுவாவின் அதிபரானார். * 1985 - மிக்கேல் கொர்பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்

 

ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ300 ரக விமானம் முதன் முதலாக 1972-ம் ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி வானில் பறந்தது.  1974-ம் ஆண்டு மே 30-ந்தேதி பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்தது. 2007-ம் ஆண்டு ஜுலை மாதம் இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1962 - கியூபாவிலிருந்து சோவியத் ஏவுகணைகளை அகற்றுவதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவ் அறிவித்தார். * 1985 - சண்டினீஸ்டாவின் டானியேல் ஒர்ட்டேகா நிகராகுவாவின் அதிபரானார். * 1985 - மிக்கேல் கொர்பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். * 2001 - பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் கண்முடித்தனமாக சுட்டதில் பெண்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர். * 2001 - கேரளாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நாகர்கோவில் பகுதியில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டது.

* 2006 - 1930-களில் ரஷ்யக் கம்யூனிஸ்டுகளால் உக்ரேனின் பிகீவ்னியா காட்டில் கொலை செய்யப்பட்ட 817 உக்ரேனியர்களினது இறுதிச் சடங்குகள் அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றன. * 2006 - தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே 8 மாதங்களாகத் தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுக்கள் ஜெனீவாவில் மீண்டும் ஆரம்பமாயின.