கால்பந்து ஜாம்பவான் மரடோனா பிறந்த தினம்: 30-10-1960

கால்பந்து ஜாம்பவான் மரடோனா பிறந்த தினம்: 30-10-1960

கால்பந்து போட்டியின் ஜாம்பவான் என்று கருதப்படும் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த மரடோனா இதே தேதியில் 1960-ம் ஆண்டு பிறந்தார்.

 

அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர். இவர் எந்தவொரு காலக்கட்டத்திலும் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று பரவலாகக் கருதப்படுகிறார். நூற்றாண்டின் சிறந்த பிஃபா வீரர் விருதுக்காக இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் முதலாவதாக வந்து இந்த விருதை பீலேவுடன் பகிர்ந்து கொண்டார்.

மரடோனா தனது தொழில்வாழ்க்கையில் கால்பாந்து கிளப்பில் இருந்த காலத்தில் அவர் அர்ஜென்டினா ஜூனியர்ஸ், போகா ஜூனியர்ஸ், பார்சிலோனா, சீவில்லா, நியூவெல்ஸ் ஒல்ட் பாய்ஸ் மற்றும் நப்போலி போன்ற மன்ற அணிகளுக்காக விளையாடி ஒப்பந்தப் பண அளவில் உலக சாதனை செய்துள்ளார்.

 


தனது சர்வதேச விளையாட்டு வாழ்கையில் அர்ஜென்டினா அணிக்காக 1977 முதல் 1994 வரை 91 போட்டிகளில் விளையாடி 34 கோல்களை அடித்துள்ளார். 1986-ம் ஆண்டின் உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணியின் தலைவராக இருந்து இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனிக்கு எதிராக வெற்றிப் பெற தலைமை தாங்கிய போட்டியுடன் சேர்த்து நான்கு பிஃபா உலக கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக தங்கப் பந்து விருதையும் பெற்றார்.

இந்த போட்டிகளின் காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறுவதற்கு காரணமாக இவர் அடித்த இரண்டு கோல்கள், இரண்டு வேறுபட்ட காரணங்களுக்காக கால்பந்து வரலாற்றில் இடம் பெற்றது. தண்டம் விதிக்கப்படாத முறையில் முதலில் அடித்த கோல் "கடவுளின் கை" என்று அறியப்பட்டது, அதே வேளையில் இங்கிலாந்தின் ஆறு வீரர்களை தாண்டி 60 மீட்டர் தொலைவிலிருந்து அடிக்கப்பட்ட இரண்டாவது கோலானது கண்ணைக் கவரும் விதத்தில் இருந்ததால் 20-ம் நூற்றாண்டின் சிறந்த கோல் என்று பொதுவாக அறியப்படுகிறது.

விளையாட்டு வீரர்களில் சர்ச்சைகளில் அதிகமாக சிக்கிக் கொள்ளும் நபர் என்றும் செய்திகளில் அதிகமாக பேசப்படும் நபர் என்றும் பல்வேறு காரணங்களுக்காக மரடோனா அறியப்பட்டார். இத்தாலியில் நடைபெற்ற போதைப் பொருள் சோதனையில் கோகைன் போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதால் 1991-ம் ஆண்டில் கால்பந்து விளையாட்டிலிருந்து 15 மாதங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டார், மற்றும் எபெட்ரின் பயன்படுத்திய காரணத்திற்காக அமெரிக்க ஒன்றியத்தில் 1994-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியிலிந்து வெளியேற்றப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பபட்டார்.

1997-ம் ஆண்டில் தனது 37-வது பிறந்தநாள் முதல் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, கோகைன் தவறாக பயன்படுத்தியதன் விளைவாக மோசமான உடல்நிலை மற்றும் அதிகப்படியான உடல் எடையினால் பாதிக்கப்பட்டார். 2005-ம் ஆண்டில் வயிற்றில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை எடை கூடுவதை தடை செய்வதற்கு உதவியது. கோகைன் பழக்கத்திலிருந்து விடுபட்ட பிறகு அர்ஜென்டினாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இவர் மிகவும் பிரபலமானார்.

இவரது வெளிப்படையான பேச்சு நிருபர்கள் மற்றும் விளையாட்டு உறுப்பினர்களுடன் சச்சரவை சில நேரங்களில் ஏற்படுத்தும். மேலாண்மையில் அவருக்கிருந்த முன்னனுபவம் குறைவு எனினும், 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளராக பதவியேற்றார்.