
இனிவரும் நாட்களில் இதுவே நடைமுறை - யாழ் குடாநாட்டு மக்களுக்கு மிகமுக்கிய அறிவிப்பு
யாழ். மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலமைகள் தொடர்பில் ஆராயும் மாவட்ட கொரோனா செயலணிக் கூட்டம் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டம் யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புத் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், வடமாகாண சுகாதார சேவைகள் பணப்பாளர் கேதீஸ்வரன், வடமாகாண உளநல சேவை பணிப்பாளர் கேசவன்,
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, யாழ்.மாவட்ட கட்டளை தளபதி, யாழ்.மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ பணிப்பாளர், யாழ்.மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள்,
யாழ்.மாநகர ஆணையாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள், சுகாதார சேவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவை வருமாறு,
- திருமணம் - வீட்டில் நடத்த 50 பேருக்கு அனுமதி வழங்கப்படும். (வெளிமாவட்டத்தில் இருந்து கலந்துகொள்ள,வருகை தருவது தடை)
- மரண சடங்கு - 25 பேர் அனுமதி (2 தொடக்கம் 3 நாட்கள் நிறைவுறுத்த வேண்டும்) (வெளிமாவட்டத்தில் இருந்து கலந்துக்கொள்ள, வருகை தருவது தடை)
- நடைபாதை வியாபாரம் - மரக்கறி வியாபரத்திற்கு மட்டும் அனுமதி
- தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்க தடை
- திறந்த சந்தைக்கு அனுமதி இல்லை
- விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்கவும்
- மக்கள் கூட்டங்களை, பொது நிகழ்வுகளை ஒத்திவைக்கவும்
- பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும் அனுமதி
- திறந்த சந்தை இயங்க அனுமதி மறுப்பு
- உணவகங்களில் இருந்து உண்ண தடை (பார்சல் மட்டும் அனுமதி)
- வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தருவோர் கிராம சேவகர்கள் ஊடாக பதிய வேண்டும்.
- தொழிற்சாலைகளில் வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்து தொழில் புரிவோர், முடக்கப்பட பகுதிகளில் இருந்து பணிபுரிவோருக்கு தங்குமிடம் உணவு வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
- அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் திரட்டு செய்யப்படவேண்டும்.
- முடக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியிடங்களுக்கு செல்ல தடை, முடக்கப்பட்ட பகுதிகளுக்குள் குடும்பத்தில் ஒருவர் மட்டும் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் செல்லலாம்.
- அவசர தொலைபேசி உதவி இலக்கமாக 0212225000 செற்படும்.
- அவசர நிலை கருதி ஒருங்கிணைத்த செயலகமாக மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் 7 நாட்களும் செயற்படும்.
- ஆலயங்களில் மதகுருமார்களுக்கு மட்டும் அனுமதி. அன்னதானங்களுக்கு தடை.
- பாடசாலை நேர்முக பரீட்சைக்கு கட்டுபாடுகளை கல்வி திணைக்களம் மேற்கொள்ளும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.