
தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியான நாள் (அக். 31- 1931)
காளிதாஸ் 1931-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமாகும். இந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது.
காளிதாஸ் 1931-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமாகும். இந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1863- நியூசிலாந்தில் நிலை கொண்ட பிரித்தானியப் படைகள் 'வைக்காட்டொ' என்ற இடத்தில் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து மவோரி போர்கள் மீண்டும் ஆரம்பமானது. * 1864– நெவாடா ஐக்கிய அமெரிக்காவின் 36-வது மாநிலமாக இணைந்தது. * 1876- இந்தியாவின் கிழக்குக் கரையில் இடம்பெற்ற மிகப்பெரும் சூறாவளி காரணமாக 2 லட்சம் பேர் வரை இறந்தனர். * 1913 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலை 'லிங்கன்' நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. * 1924 – உலக சேமிப்பு நாள் இத்தாலியின் மிலானோ நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.
* 1931- தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது. * 1941– இரண்டாம் உலகப் போர்: ஐஸ்லாந்துக்கு அருகில் அமெரிக்கக் கப்பல் ஒன்றை ஜெர்மனியின் படகு தாக்கி மூழ்கடித்ததில் 100 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். * 1941– இங்கிலாந்தில் தொழிற்சாலை ஒன்று தீப்பற்றியதில் 49 பேர் கொல்லப்பட்டனர். * 1954- அல்ஜீரியாவில் பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்கெதிராக அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி போராட்டத்தை ஆரம்பித்தது. * 1956- ஐக்கிய பிரிட்டன் மற்றும் பிரான்ஸ், சூயஸ் கால்வாயைத் திறக்க வற்புறுத்தி எகிப்தின் மீது குண்டுகளை வீசின. * 1961- ஸ்டாலினின் உடல் மொஸ்கோவில் உள்ள லெனினின் நினைவகத்தில் இருந்து அகற்றப்பட்டது. * 1963- இண்டியானாவில் பனிக்கட்டி சறுக்கல் விழா ஒன்றின் போது இடம்பெற்ற வெடி விபத்தில் 74 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
* 1968– வியட்நாம் போர்: பாரிஸ் அமைதிப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வட வியட்நாம் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் நவம்பர் 1ல் இருந்து நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சன் அறிவித்தார். * 1969 - வால் மார்ட் தொடங்கப்பட்டது. * 1973 – அயர்லாந்தில் டப்ளின் நகர சிறை ஒன்றில் இருந்து மூன்று ஐரியக் குடியரசு ராணுவத்தினர் அங்கு தரையிறங்கிய கடத்தப்பட்ட ஹெலிகாப்டர் வானூர்தி ஒன்றில் தப்பி வெளியேறினர். * 1984 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 2000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். * 1994 - அமெரிக்க விமானம் ஒன்று கடும் பனி காரணமாக இண்டியானாவில் விபத்துக்குள்ளாகியதில் 68 பேர் கொல்லப்பட்டனர்.
* 1996- விமானம் ஒன்று பிரேசிலில் வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 98 பேரும் தரையில் 2 பேரும் கொல்லப்பட்டனர். * 1999 - எகிப்திய விமானம் ஒன்று மசாசுசெட்சில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 217 பேரும் கொல்லப்பட்டனர். * 2000 - சிங்கப்பூர் போயிங் 747- 400 விமானம் தாய்வானில் விபத்துக்குள்ளாகியதில் 83 பேர் கொல்லப்பட்டனர். * 2000 - வடக்கு அங்கோலாவில் தனியார் அண்டோனொவ் விமானம் வெடித்துச் சிதறியதில் 50 பேர் கொல்லப்பட்டனர். * 2003 - 22 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் மலேசியப் பிரதம மந்திரி மகதிர் பின் முகமது தமது பதவியைத் துறந்தார்.