யாழ் குடாநாட்டின் தற்போதைய நிலவரம்! மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ் குடாநாட்டின் தற்போதைய நிலவரம்! மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

யாழ். மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று அதிகரித்திருக்கின்றது.

யாழ். நகரப் பகுதியில் 4 கடைகளுக்கு மேல் மூடப்பட்டுள்ளது. அதேபோல தொற்றாளர் சென்ற உணவகம் மற்றும் சிகை அலங்கார நிலையம் போன்றன மூடப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் நடமாட்டங்களை குறைத்து, அவர்கள் செல்லும் இடங்கள் தொடர்பான விவரங்களை வெளிப்படுத்த வேண்டும்.

வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் அவர்களுடைய வீடுகளிலேயே இரண்டு வாரங்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு பிற்பாடு வெளியில் செல்லலாம்.

வெளியே போவது மிக ஆபத்தான விடயம். தற்போது வடக்கில் தொற்று அதிகரிப்பதற்கு வெளி மாவட்டத்திலிருந்து வருவோரின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணமாக உள்ளது.

அதே போல் வெளி மாவட்டத்திலிருந்து யாழ். மாவட்டத்திற்கு வருவோர் கட்டாயமாக அப்பகுதிபொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

சமூக இடைவெளி மற்றும் முக கவசம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் செயற்படவேண்டும்.

தற்பொழுது கடைகள் வர்த்தக நிலையங்களை பொறுத்தவரைக்கும் அவர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கியிருக்கிறோம்.

கூடுமான வரைக்கும் அங்காடி வியாபாரங்களை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக வெளி மாவட்டங்களிலிருந்து வந்து அங்காடி வியாபாரம் செய்பவர்கள் தற்காலிகமாக தமது வியாபாரத்தை நிறுத்தவேண்டும் என தெரிவித்தார்.