வடக்கு மாகாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இராணுவ தளபதி...!

வடக்கு மாகாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இராணுவ தளபதி...!

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இன்று வடக்கு மாகாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கிளிநொச்சி பகுதிக்கு சென்ற இராணுவ தளபதி அங்குள்ள இராணுவ வீரர்களுக்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் திட்டங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த இராணுவ வீரர்கள் செயற்படும் விதத்தினையும் அவர் பாராட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.