
பழம்பெரும் திரைப்பட நடிகரும் பாடகருமான தியாகராஜ பாகவதர் மறைந்த தினம்: நவ. 1- 1959
தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கதாநாயன் மற்றும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகர் என்ற பெருமையை பெற்றவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடத்துள்ளார். அவர் நடித்த 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. 1944-ல்
தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கதாநாயன் மற்றும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகர் என்ற பெருமையை பெற்றவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடத்துள்ளார்.
அவர் நடித்த 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. 1944-ல் வெளியான இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ், 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை பெற்றது.
தமிழ்நாட்டிலுள்ள மாயவரத்தில் விஸ்வகர்மா பொற்கொல்லர் குடும்பத்தில் 1910-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி கிருஷ்ணமூர்த்தி - மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாக பிறந்தார் தியாகராஜர். அவரின் சிறுவயதிலேயே தந்தை கிருஷ்ணமூர்த்தி, தமது குடும்பத்துடன் திருச்சிக்குச் சென்றுவிட்டார்.
சிறு வயதில் பள்ளிப் படிப்பில் அவருக்கு நாட்டம் இல்லை. பாட்டு மற்றும் இசைக்கச்சேரிக்கு அதிகமாக செல்வார். அங்கு பாடப்படும் பாடல்களை, கேட்போர் வியக்கும் வகையில் ராகம் மாறாமல் பாடிக்காட்டுவாராம்.
அதன்பின்னர் பாட்டு மற்றும் நடிப்பில் கற்றுத் தேர்ந்த தியாகராஜர் திரைத்துறையில் முத்திரை பதித்தார். பின்னர் சென்னையில் பரபரப்பாக பேசப்பட்ட லட்சுமி காந்தன் கொலை வழக்கில் தண்டனை பெற்று பின்னர், விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர் அவரது படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நடிப்பில் இருந்து விலகி இருந்த அவருக்கு, ஈரல் நோய் பாதிப்பு ஏற்பட்டது.
அவர் கடைசியாக சிவகாமி படத்தில் நடித்தார். அந்த படத்தின இறுதி காட்சிகள் கோயில்களில் எடுக்கப்பட்டது. அக்காட்சிகளின் பொழுதே அவர் அதிக நலிவடைந்திருந்தார். அவரின் காடசிகளுக்கு வாயசைக்க முடியா நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார. கண்கள் பழுதடைந்த நிலையில் காட்சிகளில் நடிக்க தடுமாறினார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் இறுதியில் 1959-ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சென்னை அரசு பொதுமருத்துமனையில் காலமானார். ஏராளமான ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த அந்த கலைஞனின் வாழ்க்கை 50 வயதிலேயே முடிந்தது.
இதே நவம்பர் 1-ம் தேதியில் நினைவில் நிற்கும் பிற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-
1956 - இந்தியாவில் கன்னியாகுமரி பிரதேசம் கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து தமிழ்நாடு மாநிலத்துடன் புதிய மாவட்டமாக இணைந்தது.
1604 - ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ நாடகம் முதற்முறையாக லண்டனில் அரங்கேறியது.
1611 - ஷேக்ஸ்பியரின் த டெம்பெஸ்ட் நாடகம் முதற்முறையாக லண்டனில் அரங்கேறியது.
1755 - போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக சுமார் 90,000 பேர் இறந்தனர்.
1876 - நியூசிலாந்தின் மாகாண சபைகள் கலைக்கப்பட்டன.
1948 - சீனாவின் மஞ்சூரியா என்ற இடத்தில் சீனக் கப்பல் வெடித்து மூழ்கியதில் 6,000 பேர் கொல்லப்பட்டனர்.