கொலம்பியாவில் இருந்து பனாமா விடுதலை பெற்ற நாள்: 03-11-1903

கொலம்பியாவில் இருந்து பனாமா விடுதலை பெற்ற நாள்: 03-11-1903

வட அமெரிக்க நாடானா பனாமா கொலம்பியாவில் இருந்து 1903-ம் ஆண்டு இதே நாளில் விடுதலை ஆனது.

பனாமா மத்திய அமெரிக்காவின் தென்முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். தரை வழியாக வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் கடைசி மத்திய அமெரிக்க நாடு இதுவாகும். இந்நாட்டின் மேற்கில் கோஸ்டா ரிகாவும், வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், தெற்கில் பசிபிக் பெருங்கடலும், தென்கிழக்கில் கொலம்பியாவும் அமைந்துள்ளன.

வடஅமெரிக்கா ஸ்பெயின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. இதில் இருந்து கொலம்பியா கடந்த 1821-ம் ஆண்டு பிரிந்தது. அப்போது பனாமாவும் பிரிந்து கொலம்பியாவுடன் இணைந்து கொலம்பிய குடியரசாக இருந்து வந்தது. அதன்பின் 1903-ம் ஆண்டு இதே நாளில் (நவம்பர் 3) கொலம்பியாவில் இருந்து பனாமா விடுதலை பெற்று தனி நாடாக மாறியது.

 



மேலும், இதே நாளில் பிறந்த தலைவர்கள் விவரம் மற்றும் இறந்த தலைவர்களின் விவரங்கள்:-

பிறப்புகள்
1618 –  ஔரங்கசீப், இந்தியாவின் மொகாலய சக்கரவர்த்தி, (இ. 1707)
1911 – ஏ. கே. செட்டியார், தமிழில் பயண இலக்கியத்தின் முன்னோடி (இ. 1983)
1928 –  ஒசாமு தெசூகா, ஜப்பானியத் திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 1989)
1930 – பெடரிக்கு இசுட்டால், டச்சு மெய்யியலாளர் (இ. 2012)
1932 – அன்னை பூபதி, மட்டக்களப்பில் இந்திய அமைதிப்படைக்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தவர் (இ. 1988)
1933 – அமர்த்தியா சென், நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளியலாளர்

இறப்புகள்

1584 – சார்லஸ் பொரோமெயோ, இத்தாலியக் கர்தினால், புனிதர் (பி. 1538)
1639 – மார்டின் தெ போரஸ், பெருவின் புனிதர் (பி. 1579)
1989 – டிமோதி இம்பவன்றா, பிஜி அரசியல்வாதி (பி. 1934)
1998 – பாப் கார்னே, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1915)