கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில்...!

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில்...!

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமானது.

தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்துக்கு அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுக்களை உள்ளடக்கி 4 குழுக்கள் அமைக்கப்பட்டன.

சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு, வாழ்வாதார மேம்பாட்டு குழு, உள்நாட்டு உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கான அபிவிருத்தி குழு மற்றும் கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு என்பன அதில் அடங்குகின்றனர்.

இந்த நிலையில், கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவின் கூட்டம் யாழ்ப்பாணம்- கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கி இன்று இடம்பெறுகிறது.

நீர்ப்பாசனம் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோர் உட்பட இராஜாங்க அமைச்சர்கள் சிலரும் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.