விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு

கொழும்பு மாநாகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

 

இதன்போது ஒவ்வொரு பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் அனைத்து சுற்றாடல் பகுதிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

 

குறித்த இடங்களை பரிசோதனை செய்யும் பணியில் பொது மக்கள் சுகாதார அதிகாரியொருவருடன் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் கழிவு முகாமைத்துவத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரும் இடம்பெறுவர் என கொழும்பு மாநாகர சபை தெரிவித்துள்ளது.

 

இதற்கமைவாக நகரத்தில் அனைத்து வடிகான் கட்டமைப்பு, இயற்கை கழிவுப்பகுதி மற்றும் சாக்கடைப் பகுதிகள் ஆகியன பரிசோதனை செய்யப்பட்டு சுத்தம் செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

சம்பந்தப்பட்ட சுற்றாடல் பகுதிகள் பரிசோதனை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய இடங்கள் அடையாளங் காணப்பட்டால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்ட்டுள்ளது.